ஆண்டிப்பட்டி தேர்தல்: காங்., தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ், தமாகா, மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியகம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சைதாப்பேட்டை ஆகிய 3 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தயாரித்ததில்முறைகேடுகள் நடந்திருப்பதாக திமுக புகார் அளித்திருந்தது.
இதையடுத்து அங்கு விசாரணை நடத்திய தலைமை தேர்தல் கமிஷன், சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடிதொகுதிகளில் மட்டும் இடைத் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிட்டது.
ஆனால் ஆண்டிப்பட்டியில்தான் மற்ற 2 தொகுதிகளைவிட ஏராளமான அளவில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறிஅதிமுக தவிர மற்ற அனைத்து எதிர்க் கட்சிகளும் தேர்தல் கமிஷனிடம் மீண்டும் புகார் கூறின.
இந்நிலையில் காங்கிரஸ், தமாகா, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நேற்று (சனிக்கிழமை) இரவு அறிவித்தன.
ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் முறையாகவும் சுமூகமாகவும் நடைபெற வாய்ப்பில்லை என்று கருதுவதாகவும்,இதனால்தான் அங்கு தாங்கள் போட்டியிடப் போவதில்லை என்று அந்தக் கட்சிகள் தெரிவித்தன.
ஆண்டிப்பட்டியில் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியிலும், 3வது அணியை அமைக்கும் முயற்சியிலும்இக்கட்சிகள் தோல்வியடைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications