சீன விமானத்தில் அமெரிக்க உளவுக் கருவிகள்
வாஷிங்டன்:
ரிப்பேருக்காகக் கொடுத்திருந்த சீனாவின் போயிங் விமானத்தில் அமெரிக்க கான்ட்ராக்டர்கள் ரகசிய வேவுக்கருவிகளைப் பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜியாங் ஸெமினுக்காக கடந்த அக்டோபர் 2000ல் வாங்கப்பட்ட இந்த போயிங் 767 ரக விமானத்தில்சில மாற்றங்கள் செய்வதற்காக, அமெரிக்க கான்ட்ராக்டர்களிடம் கொடுக்கப்பட்டது.
ஆனால் அந்த அமெரிக்க கான்ட்ராக்டர்களோ அந்த விமானத்தின் குளியலறை, படுக்கை உள்பட 27 இடங்களில்சிறிய சிறிய மைக்ரோபோன் போன்ற உளவுக் கருவிகளையும் ரகசியமாகப் பொருத்தியுள்ளனர். பின்னர் கடந்தஆகஸ்டு மாதம் இதை சீனாவிடம் ஒப்படைத்து விட்டனர்.
ஆனால் சீன ராணுவம் கடந்த அக்டோபரில் நடந்த சோதனை ஓட்டத்தின்போது இந்தக் கருவிகளைக்கண்டுபிடித்துவிட்டது.
இந்த உளவுக் கருவிகள் முழுக்க முழுக்க செயற்கைக் கோள்கள் மூலமே இயக்கப்படும் தன்மை வாய்ந்தவை என்றுஅந்தச் செய்தித் தாள்கள் கூறியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக சில சீன அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இன்னும் ஒரு மாதத்தில் சீனா சென்று ஜியாங் ஸெமினைச் சந்திக்கவிருக்கும்இவ்வேளையில், இச்செய்தி வெளியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ளது.