For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்:

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 8 தீவிரவாதிகள், ஒரு ராணுவ வீரர் உள்பட 10 பேர்கொல்லப்பட்டனர்.

கூப்வாரா மாவட்டத்தில் உள்ள கீகம் என்ற இடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தீவிரவாதிகள்வேட்டையின்போது, பாதுகாப்புப் படையினர் மீது அவர்கள் பயங்கரத் தாக்குதலை நடத்தினர்.

உடனே பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்கியதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் ஒருபாதுகாப்புப் படை வீரரும் கொல்லப்பட்டார்.

அதேபோல், அனந்தநாக் மாவட்டத்தில் நடந்த இரு சம்பவங்களில் நடந்த தீவிர வேட்டையின்போது, 4தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே கூப்வாரா அருகே உள்ள டேடிகோட் காட்டுப் பகுதியில் நேற்றிரவு ஒரு தீவிரவாதக் கும்பலைப்பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தியதில், ரம்ஜான் சோப்பான் என்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்நிலையில் புல்வாமா மாவட்டத்தில் அப்துல் ரஷித் பத்தான் என்ற ஒரு நபர் அடையாளம் தெரியாத சிலரால்சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் நதியில் குண்டடி பட்ட நிலையில் ஒரு சடலம் மிதந்து வந்ததையும் போலீசார்கண்டுபிடித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X