காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டு 11 முஸ்லீம்கள் பலி

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

காஷ்மீரில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை ஒரு கிராமத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள், 8 குழந்தைகள் உள்பட11 முஸ்லீம்களைச் சுட்டுக் கொன்றனர்.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சால்வா-பேரா கிராமத்திற்குள் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத தீவிரவாதிகள்புகுந்தனர்.

ஜாகீர் ஹூசைன் என்பவரையும் அவருடைய 2 குழந்தைகளையும் (2 பேருக்கும் 2 வயதுகூட இருக்காது)சராமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

பின்னர் முகம்மது ஜமாம் என்ற வீரரின் வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள், அவருடைய மனைவி கதீன் பீஎன்பவரையும் அவருடைய குழந்தைகளான முகம்மது மீபூஸ் மற்றும் முகம்ம யசீர் ஆகியோரையும்வெறித்தனமாகச் சுட்டுக் கொன்றனர்.

இத்தோடு தீவிரவாதிகளின் வெறி அடங்கவில்லை. அருகில் உள்ள முகம்மது அக்ரம் என்பவருடையவீட்டுக்குள்ளும் புகுந்து, அவருடைய 2 மகன்களையும் சுட்டுக் கொன்றனர். அப்போது அவர்களைத் தடுத்த 2பெண்கள் குண்டுக் காயம் அடைந்தனர்.

கொலை வெறிபிடித்த தீவிரவாதிகள் மேலும் 2 குழந்தைகளையும் மற்றொரு நபரையும் சுட்டுக் கொன்றதாகவும்கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட அனைவருமே முஸ்லீம்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அதே கிராமத்தைச் சேர்ந்த முகம்மது நஸீர் என்ற போலீஸ் அதிகாரியையும் தீவிரவாதிகள் கடத்திச்சென்றுவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+