தேர்தல் கமிஷனரை நீக்கக் கோரி ஜனாதிபதிக்கும் திமுக கடிதம்
சென்னை:
தேர்தல் கமிஷனர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரி ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கும் திமுக கடிதம் எழுதியுள்ளது.
வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் நடந்துள்ள ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் நடத்த அனுமதித்ததன் மூலம்அரசியல் சாசன சட்ட விதிகளை கிருஷ்ணமூர்த்தி மீறிவிட்டார் என்று திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் அவரை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோவுக்கு நேற்றுதிமுகவினர் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஜனாதிபதிக்கும் திமுக எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் தேர்தலை நடத்த உத்தரவிட்டு ஆண்டிப்பட்டியில் மட்டும்தேர்தல் நடத்த அனுமதித்ததன் மூலம் தேர்தல் ஆணையம் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது என்றுதிமுக எம்.பிக்கள் அந்தக் கடிதத்தில் கடுமையாகக் கூறியுள்ளனர்.
இதனால் கிருஷ்ணமூர்த்தியை நீக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்என்று அக்கடிதத்தில் ஜனாதிபதியிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திமுக எம்.பிக்களான விடுதலை விரும்பி, எஸ். சிவசுப்பிரமணியன் மற்றும் ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் அந்தக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.