மகாராஷ்டிரா விபத்தில் சேலத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சுற்றுலா சென்ற சேலம் ஜவுளிக்கடை அதிபர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சாலைவிபத்தில் பலியாகினர்.

சேலம் அக்ரஹாரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் உரிமையாளர் முத்துக்கிருஷ்ணன் (70). இவரது மகன்கள்கோவிந்தராஜ் (45), பழனிச்சாமி (42).

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு பழனிச்சாமி, அவரதுமனைவி ராஜேஸ்வரி (38), மகன் தினேஷ், அவரது அண்ணன் மகள் சுனிதா, உறவினர்கள் வெங்கட்ராமன் (55),பாலசுப்பிரமணியம் (28) உட்பட 8 பேருடன் கடந்த 15ம் தேதி சேலம் நங்கவள்ளியிலிருந்து ஜீப்பில் சுற்றுலாசென்றனர்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தளங்களை சுற்றி பார்த்து விட்டுஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரா வந்தனர். அங்கு நாக்பூர் சென்று விட்டு அக்கோரலா மாவட்டம் முர்திசாபூர் என்றஇடத்தில் ஜீப்பில் அனைவரும் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்புறம் வேகமாக வந்த லாரி ஒன்று ஜீப் மீது மோதியது. இதில் ஜீப் லாரியின் அடிப்பாகத்தில் சிக்கிநொறுங்கியது. இதில் பழனிசாமி, ராஜேஸ்வரி, வெங்கட்ராமன், புவனேஸ்வரி, பாலசுப்பிரமணியம், ஜீப் டிரைவர்அழகப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

படுகாயமடைந்த சுனிதா, தினேஷை போலீசார் அக்கோரலா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குஅவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த பழனிச்சாமி உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ்வண்டிகள் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) சேலம் வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+