For Daily Alerts
Just In
அசாமில் 16 கூலித் தொழிலாளர்கள் சுட்டுக் கொலை
கெளஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ தீவிரவாதிகள் 9 பெண்கள் உட்பட 16 கூலித் தொழிலாளர்களை வரிசையாக நிற்கவைத்து சுட்டுக் கொன்றனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த மூன்று வீடுகளில் இருந்த தொழிலாளர்களை வெளியில் வரச் சொல்லி, அவர்களைவரிசையாக நிற்க வைத்து சரமாரியாக சுட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 9 பெண்கள் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின்வீடுகளையும் தீயில் கொளுத்தி விட்டு தீவிரவாதிகள் ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்த போலீசாரும், ராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Comments
Story first published: Monday, January 22, 2001, 5:30 [IST]