For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசாமில் 16 கூலித் தொழிலாளர்கள் சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

கெளஹாத்தி:

அஸ்ஸாம் மாநிலத்தில் போடோ தீவிரவாதிகள் 9 பெண்கள் உட்பட 16 கூலித் தொழிலாளர்களை வரிசையாக நிற்கவைத்து சுட்டுக் கொன்றனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் டேராங் மாவட்டத்தில் இந்திய-பூடான் எல்லைக்கருகில் உள்ள ஜங்கில்பாரி கிராமத்தில்,போடோ இயக்கத்தைச் சேர்ந்த 15 தீவிரவாதிகள் நேற்று (திங்கட்கிழமை) இரவு ஆயுதங்களுடன் நுழைந்துள்ளனர்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த மூன்று வீடுகளில் இருந்த தொழிலாளர்களை வெளியில் வரச் சொல்லி, அவர்களைவரிசையாக நிற்க வைத்து சரமாரியாக சுட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் 9 பெண்கள் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின்வீடுகளையும் தீயில் கொளுத்தி விட்டு தீவிரவாதிகள் ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்த போலீசாரும், ராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X