பாக். மீது கடும் நடவடிக்கை வரும்: கடற்படைத் தளபதி
மும்பை:
இந்தியா கேட்கும் 20 தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் ஒப்படைக்கவில்லை என்றால், அந்த நாட்டின் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று கடற்படைத் தளபதியான அட்மிரல் மாதவேந்திரா சிங்கூறினார்.
பின்னர் சிங் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரைநாம் பொறுமையை தான் கடைபிடித்து வருகிறோம்.
ஆனால், இந்திய பாராளுமன்றம், காஷ்மீர் சட்டசபை தாக்கப்பட்டதை அடுத்து நம் பொறுமையை மீற வேண்டியகட்டாயத்தில் உள்ளோம்.
இந்தியா கேட்டுள்ள 20 தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்கும் என்று நம்புகிறேன். அப்படி அந்த நாடுஎடுக்கத் தவறினால் ராணுவம், விமானப்படை ஆகியோருடன் சேர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் கடற்படை உள்ளது.
நாம் நம் நாட்டுக்காக உயிரையும் தியாகம் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார் அட்மிரல் மாதவேந்திரசிங்.












Click it and Unblock the Notifications