நெல்லையில் ரூ.20 லட்சம் மதிப்பு ஐம்பொன் சிலைகள் கொள்ளை
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே பழமையான பெருமாள் கோவிலில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அருகே நரசிங்கநல்லூரில் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. நேற்று(திங்கட்கிழமை) அதிகாலையில் கோவிலுக்கு பூஜை செய்ய பூசாரி சென்ற போது, மூலவர் அறைக்கதவுஉடைக்கப்பட்டு சிலை திருடப்பட்டது தெரிய வந்தது.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஒன்றரை அடி உயரமுள்ள சீனிவாச பெருமாள் சிலை, ஒண்ணேகால் அடி பூமி சிலை,நீலா சிலை, சக்கரத்தாழ்வார் சிலை, விஸ்வக்சேனர் சிலை ஆகிய 5 சிலைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
மேலும் அம்மனுக்கு அணிவிக்கப்படும் இரண்டு தங்கத்தாலிகள், இரண்டு தங்கப் பொட்டுகள் ஆகியவையும்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 20 லட்சம்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கொள்ளையர்களை தீவிரமாகதேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் தொடர்ந்து 6வது முறையாக கோவில் சிலைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.