ஆப்கானில் கைதான 1,000 பாகிஸ்தானியர் விடுதலை
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு ஆதரவாகப் போராடி அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்ட1,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
கைதாகியுள்ள பாகிஸ்தான் வீரர்களை ஒப்படைக்குமாறு அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் அமெரிக்காவிடம்கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டு, ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய வீரர்கள் மற்றும் உளவு அதிகாரிகள் ஆகியோரை விடுதலைசெய்வதாக அறிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் விமானம் மூலம் குண்டூஸிலிருந்து பாகிஸ்தானின் வடக்கு மேற்குப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
பாகிஸ்தானியர்களோடு சேர்ந்து தலிபான்களும், அல்-கொய்தா தீவிரவாதிகளும் தப்பிக்க வாய்ப்புள்ளது என்றுநியூயார்க் பத்திரிக்கை ஒன்று கூறியுள்ளது.
பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவத் தளம்:
இந்நிலையில் தங்கள் ராணுவத்தளத்தை பாகிஸ்தானில் அமைப்பதற்காக 20,000 ஏக்கர் நிலத்தை தருமாறுஅந்நாட்டு அரசுடன் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள தல்பாதின், பாசனிப்பகுதியில் நிலத்தை 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு தருமாறு அமெரிக்காகடந்த ஒரு மாதகாலமாக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் இந்த செய்தியை மறுத்துள்ளார்.