நேரடி நெல் கொள்முதல் கோரி விவசாயிகள் சாலை மறியல்
தஞ்சாவூர்:
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று கோரி காவிரி பாசனமாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) சாலை மறியல்செய்தனர்.
காவிரி பாசனத்தைச் சேர்ந்த தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தற்போது சம்பாசாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
சாகுபடி செய்யப்பட்ட நெல் மூட்டைகளை எடுத்துக் கொண்டு விவசாயிகள் தமிழக அரசின் கொள்முதல்நிலையங்களுக்குச் சென்றுள்ளனர்.
ஆனால் அவற்றைப் பெற்றுக் கொள்ள கொள்முதல் நிலைய அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
3வது ரக நெல் மூட்டைகள் தரம் குறைந்திருப்பதாகக் கூறி அவற்றை அதிகாரிகள் வாங்க மறுத்து விட்டதாகவிவசாயிகள் கூறினர்.
இதைக் கண்டித்தும், நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்கக் கோரியும் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்தஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மொத்தம் 100 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் நடத்தினர். சாலை மறியல் செய்த நூற்றுக்கும் மேற்பட்டவிவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகளின் சங்கங்கள்தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications