திமுகவுக்கு ஆதரவளிக்க தமாகா, மார்க்சிஸ்ட் மறுப்பு
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று தமாகா, மார்க்சிஸ்ட் கட்சிகள்கூறியுள்ளன.
காங்கிரஸ், தமாகா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாகஅறிவித்துள்ளன.
ஆனால் இக்கட்சிகள் திமுக வேட்பாளரான வைகை சேகரை ஆதரிக்க வேண்டும் என்று கருணாநிதி வேண்டுகோள்விடுத்தார்.
இது குறித்து தமாகா தலைவர் வாசன் கூறுகையில், தேர்தல் நடைமுறையே தவறு என்று தான் நாங்கள்புறக்கணித்தோம். எனவே தேர்தலில் யாரையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்றார்.
இதுகுறித்து திருச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சங்கரய்யா கூறியதாவது:
வகுப்புவாதக் கட்சியுடனும், ஜாதிக் கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துள்ள திமுக, தேர்தலில் எங்கள் ஆதரவைகேட்டிருப்பது அரசியலில் மிகுந்த வினோதமானது.
வகுப்புவாதக் கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைத்து, மத்திய அரசில் பங்கேற்று இருக்கும் திமுகவுக்கு எங்கள்ஆதரவை கேட்க என்ன உரிமை இருக்கிறது?
ஆண்டிப்பட்டியில் நியாயமாக தேர்தல் நடக்காது என்பதால், நாங்கள் போட்டியிடுவதில்லை என்றுதீர்மானித்தோம்.
எனவே ஆண்டிப்பட்டியில் திமுகவுக்கு எங்களது ஆதரவு இல்லை என்று சங்கரய்யா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications