சென்னை ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட டி.வி. திரை
சென்னை:
சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமானடி.வி. திரையை இந்திய கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவரும் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தற்போதையதலைவருமான ஏ.சி. முத்தையா இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்தார்.
இந்த டி.வி. திரைதான் இந்தியாவிலேயே மிகப் பெரியது என்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே 2வது மிகப்பெரியது என்றும் கூறப்படுகிறது.
நாட்டிலேயே தமிழக கிரிக்கெட் சங்கம்தான் இதுபோன்ற வசதியை முதன் முதலாக அமைத்துள்ளது என்றுநிகழ்ச்சியில் பேசிய முத்தையா கூறினார்.
இந்த டி.வி. திரையை வெற்றிகரமாக அமைக்க முடியுமா என்று பலவிதமான சந்தேகங்கள் எழுந்தன. ஆனாலும்நாங்கள் திருப்திகரமாக அமைத்து விட்டோம் என்றும் முத்தையா கூறினார்.
இந்த டி.வி. திரையின் கீழே உள்ள காலரியில் அமர்ந்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்களும் கண்டு களிப்பதற்காகவிரைவில் இன்னொரு திரையும் அமைக்கப்படும் என்றும் முத்தையா தெரிவித்தார்.
வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) இந்த சிதம்பரம் ஸ்டேடியத்தில்தான் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்குஇடையே 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.