கோவையில் கள்ள நோட்டுகள் வைத்திருந்தவர் கைது
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் கள்ள 100 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூரில் சில சமூக விரோதிகள் இந்திய ரூபாய் நோட்டுகளைத் தயாரித்து, அவற்றைப் புழக்கத்தில்விடுவதாக போலீசாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து, போலீசார் தீவிர வேட்டையில் இறங்கி அவர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பைபாஸ் ரோட்டில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தஒரு நபரைப் பிடித்து விசாரித்தனர்.
சாய்பாபா காலனியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற அந்த நபரிடம் கள்ள நோட்டுகள் இருப்பது அப்போதுதெரிய வந்தது.
இதையடுத்து அவருடைய வீட்டைப் போலீசார் சோதனையிட்டு, அங்கிருந்த 470 கள்ள 100 ரூபாய் நோட்டுகளைக்கைப்பற்றினர். அவரிடமிருந்து டெல்லி அச்சகம் ஒன்றின் முகவரியிட்ட அடையாள அட்டை ஒன்றையும் போலீசார்பறிமுதல் செய்தனர்.
இந்த ரூபாய் நோட்டுகள் அவருக்கு எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications