கண்ணகி சிலை அகற்றம் ஏன்? - கோர்ட்டில் அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையின் பீடம் விபத்தில் சேதமடைந்ததால் கீழே விழுந்துபொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்ற காரணத்தால்தான் அங்கிருந்து சிலை அகற்றப்பட்டதுஎன்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை அகற்றியதை எதிர்த்த வக்கீல் காந்தி மற்றும் தமிழறிஞர் நன்னன்ஆகியோர் பொது நலன் கருதிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து தமிழக அரசு நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில்விளக்கம் அளித்தது.

சாலை விபத்தில் சிலையின் பீடம் சேதமடைந்தது. இதையடுத்து சிலை கீழே விழுந்து பொதுமக்களின் உயிருக்குஆபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே சிலையை அங்கிருந்து அரசு அகற்றியது.

சிலையை அகற்றியதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. வீணாக இந்தப் பிரச்சினையை அரசியலாக்கமனுதாரர்கள் முயலுகின்றனர்.

அகற்றிய இடத்திலேயே சிலையை மீண்டும் வைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோர முடியாது. அதற்குசட்டத்தில் அவர்களுக்கு இடமில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+