ஆண்டிப்பட்டி தேர்தல்: திமுக, மதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக வேட்பாளர் வைகை சேகரும், மதிமுக வேட்பாளர்ஜெயச்சந்திரனும் இன்று (புதன்கிழமை) வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்ற வைகை சேகர், ஆண்டிப்பட்டி வட்டாட்சியர்அலுவலகத்தில் தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரியான தங்கவேலு அவருடைய மனுவைப் பெற்றுக் கொண்டார்.
வைகை சேகர் மனுத் தாக்கல் செய்தபோது, மு.க. அழகிரி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர்சேதுராமன், முன்னாள் அமைச்சர்கள் பொன். முத்துராமலிங்கம் மற்றும் பெரியசாமி உள்பட பலரும்உடனிருந்தனர்.
தேனியில் மதிமுக வேட்பாளர் மனு தாக்கல்:
இதற்கிடையே மதிமுக வேட்பாளரான ஜெயச்சந்திரனும் இன்று தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அவர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications