தேயிலை விலை வீழ்ச்சி: வாசன் கவலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேயிலை விலை குறைந்து வருவதை தடுக்க தமிழக அரசும் மத்திய அரசும் தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று (புதன் கிழமை) வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேயிலை உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடையாமல் இருக்க தேயிலையின் இறக்குமதி வரியை 150 சதவிகிதமாகமாற்ற வேண்டும்.

மேலும் 2 ஆண்டுகளாக கிலோவுக்கு ரூ.2 மானியம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனை உடனடியாகவழங்க வேண்டும்.

மேலும் தேயிலை ஏலத்தில் பணக்கார எஸ்டேட் முதலாளிகளே பங்கு கொள்கின்றனர். ஒரு கிலோக்கு ரூ.4 ரூபாய்என்று ஏலத்தொகையை நிர்ணயித்துள்ளதால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

அதனல் சிறு வியாபாரிகளும் ஏலத்தில் பங்கு கொள்ளுமாறு ஏலத்தொகையை குறைக்க வேண்டும். தேயிலைஉற்பத்தியாளர்களின் பிரச்சனைகள் சம்பந்தமான மிஷ்ரா கமிஷன் அறிக்கையை உடனடியாக வெளியிடவேண்டும்.

மேலும் நீலகிரியிலிருந்து தேயிலையை வாங்கி உபயோகிக்க ராணுவம் மற்றும் ரயில்வே துறைகளுக்குஉத்தரவிடுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையால் பலதேயிலை உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள் என்று அவ்வறிக்கையில் வாசன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+