நெல்லை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம் குறைப்பு
சென்னை:
சென்னை-திருநெல்வேலி (நெல்லை எக்ஸ்பிரஸ்) மற்றும் சென்னை-தூத்துக்குடி (முத்துநகர் எக்ஸ்பிரஸ்) ஆகியரயில்களின் பயண நேரம் இன்று (வியாழக்கிழமை) முதல் குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை எழும்பூரிலிருந்து மாலை 6.30 மணிக்குக் கிளம்பும் முத்துநகர் எக்ஸ்பிரஸ், மறுநாள் காலை 7.30மணிக்குச் சென்று சேருவதற்குப் பதிலாக 7 மணிக்கே தூத்துக்குடிக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.
அதேபோல் தூத்துக்குடியிலிருந்து மாலை 5.30 மணிக்குப் பதிலாக 6.45 மணிக்குக் கிளம்பும் அதே எக்ஸ்பிரஸ்,மறுநாள் காலை 6.45 மணிக்குப் பதிலாக 7.40 மணிக்குச் சென்று சேரும்.
சென்னையிலிருந்து இரவு 7 மணிக்குக் கிளம்பும் நெல்லை எக்ஸ்பிரஸ் இன்று முதல் இரவு 7.15க்குக் கிளம்பும். இதுமறுநாள் காலை 8.20 மணிக்கே திருநெல்வேலி சென்று சேரும்.
பெங்களூர்-தூத்துக்குடி பயண நேரமும் குறைப்பு
பெங்களூரிலிருந்து இரவு 9.15 மணிக்குப் பதிலாக இரவு 9.50 மணிக்குக் கிளம்பும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்,மறுநாள் பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.
அதேபோல் தூத்துக்குடியிலிருந்து மாலை 3.40 மணிக்குக் கிளம்பும் அதே ரயில், மறுநாள் காலை 6.55 மணிக்குப்பதிலாக 6.40க்கே பெங்களூர் வந்து சேரும் என்று தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications