தர்மபுரி அருகே யானைகள் தாக்கி ஒருவர் பலி
தர்மபுரி:
தர்மபுரி அருகே வயல்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததில் ஒருவர் இறந்தார். மேலும் பலஆடுகளும் பலியாகின.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ளது செக்காரப்பட்டி. இந்தக் கிராமத்தில் நேற்றிரவு (சனிக்கிழமை)திடீரென்று 7 காட்டு யானைகள் புகுந்தன.
இந்த யானைகள் அந்தக் கிராமத்திலுள்ள வயல்களில் நுழைந்து பயிர்கள் எல்லாவற்றையும் நாசம் செய்தன.
வயலுக்கு அருகில் ஆட்டு கொட்டகை ஆடுகளும், அதற்கு காவலாக கோவிந்தன் என்பவரும் இருந்தார்.யானைகள் ஆட்டு கொட்டைகளிலும் நுழைந்து கோவிந்தனையும், ஆடுகளையும் மிதித்து துவம்சம் செய்தன.
இந்த சம்பவத்தால் கோவிந்தன் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பல ஆடுகளும்இறந்தன. இந்தச் சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்தனர்.
தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு விரைந்து, யானைகளை விரட்டும் பணியில்ஈடுபட்டுள்ளனர்.