For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை கிரிக்கெட்: பன்னீர் சகோதரர் மீது இளங்கோவன் குற்றச்சாட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் அத்துமீறியதால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உரிய டிக்கெட்வைத்திருந்தும் போட்டியை காண முடியவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து இளங்கோவன் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டியில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள்உரிய அனுமதி சீட்டு வைத்திருந்தும் உள்ளே சென்று விளையாட்டை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலர் எவ்வித அனுமதி சீட்டுமின்றி அத்துமீறி உள்ளே நுழைந்து, இருக்கைகளைப்பிடித்துக் கொண்டதே இதற்கு காரணம்.

குறிப்பாக முதல்வரின் சகோதரர் நூற்றுக்கும் மேற்பட்ட தன் நண்பர்களை போலீசார் அனுமதியின்றி உள்ளேநுழைந்து இருக்கைகளில் அமர்ந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், காவல் துறையைச் சேர்ந்தவர்களின் உறவினர் பலர் முறையான அனுமதியின்றி உள்ளேஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டுப் போட்டிகளில்கூட முறைகேடு செய்யும் இந்த அரசை, அனுமதி சீட்டு இருந்தும் போட்டியை காணஇயலாத பொதுமக்களின் சார்பில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் முறையான அனுமதி சீட்டு பெற்று போட்டியை காண முடியாத பொதுமக்களுக்குமுழு கட்டணத்தையும் உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.

பன்னீர் மறுப்பு:

இதுபற்றி முதல்வர் பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எனது சகோதரர்கள் யாரும் சென்னையில் கிரிக்கெட் போட்டியைக் காண செல்லவில்லை. போட்டி நடந்த நாளில்என்னுடைய சகோதரர்கள் யாரும் சென்னையிலேயே இல்லை.

என்னுடைய குடும்பத்தினர் 6 பேர் மட்டுமே கிரிக்கெட் போட்டியைப் பார்க்க சென்றனர். அவர்களும் முறையானஅனுமதி சீட்டு கொடுத்தே அந்த போட்டியை பார்த்தனர்.

இளங்கோவன் கூறுவது தவறான தகவல். அது போல் எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று பன்னீர்செல்வம்கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X