பிப்ரவரி மாத இறுதியில் தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர்
சென்னை:
பிப்ரவரி மாத இறுதியில் தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீர் வந்து சேரும் என்று ஆந்திர மாநில அரசுதெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் கண்டலேறு நீர் தேக்கத்திலிருந்து கிருஷ்ணா நதி நீர் பூண்டி நீர்தேக்கத்துக்கு வருமாறுதிட்டங்கள் அமைக்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக இந்த கிருஷ்ணா நதி நீர் தமிழகத்துக்கு வரவில்லை.
இது பற்றி கேட்டு அறிவதற்காக ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அதிகாரிகள் 10 நாட்களுக்குமுன் ஹைதராபாத் சென்றனர். ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் தமிழகம் திரும்பிய அந்தஅதிகாரிகள் கூறியதாவது:
கண்டலேறு நீர்த் தேக்கத்திலிருந்து பூண்டி நீர்த் தேக்கத்துக்கு வரும் வழியில் உள்ள பூண்டி கால்வாயில் விரிசல்ஏற்பட்டுள்ளது. அதனால் அதைச் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்தப் பணி பிப்ரவரி மாதம் 20ம் தேதிக்குள் முடிந்து விடும். அதற்கு பிறகு ஆந்திர அரசு தண்ணீரைத் திறந்துவிடும்.
தற்போது கண்டலேறு நீர்த்தேக்கத்தில் 15 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பிப்ரவரி மாதம் இறுதியில் 3டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்படும்.
இந்த தண்ணீரால் சென்னைக்கு அக்டோபர் மாதம் வரை தண்ணீர் பஞ்சம் தீரும் என்று அந்த அதிகாரிகள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications