பிப்.7 முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை:
தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் பிப்ரவரி 7ம் தேதி முதல் காலவரையற்றவேலைநிறுத்தம் செய்யப் போவதாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டுச் சங்கத்தினர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர்.
தீபாவளி போனஸ் பிரச்சனையிலிருந்து பொங்கல் அட்வான்ஸ் வரையிலும், சம்பளக் குறைப்பிலிருந்து பி.எப்.கடன் உதவித் தொகை குறைப்பு வரை ஏராளமான பிரச்சனைகளில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சிக்கித்தவித்து வருகின்றனர்.
இவை குறித்து விவாதிப்பதற்காக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று தமிழகம் முழுவதும்"ஆயத்த மாநாடு"களை நடத்தினர்.
சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும்இந்த "ஆயத்த மாநாடு" நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பல்வேறு முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுவரை தமிழக அரசை எதிர்த்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்ற தீர்மானமும் அவற்றில் ஒன்று.
அதன்படி வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்கள் கூட்டாகஇணைந்து வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications