ஜெ. வெற்றிக்கு பாடுபடுவோம்: தேவர் பேரவை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதாவுக்கு தேவரின மக்கள் ஒரு போதும் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள் என்று அனைத்துமக்கள் தேவர் பேரவை தலைவர் சுப்பையா தெரிவித்தார்.

அனைத்து மக்கள் தேவர் பேரவையின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று (திங்கள்கிழமை)நடந்தது. இக்கூட்டம் முடிந்த பிறகு சுப்பையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தேவரினத்தை ஜெயலலிதா மிகவும் நம்புகிறார். அதன் காரணமாகத்தான் தேவரினத்தைச் சேர்ந்தபன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி அளித்துள்ளார்.

ஆண்டிப்பட்டி தேர்தலில் ஜெயலலிதா ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறநாங்கள் பாடுபடுவோம்.

ஆண்டிப்பட்டியில் தேர்தல் முறைகேடு நடப்பதாக கூறப்படுவது தவறு. அங்கு அதிகாரிகள் நல்ல முறையில் தேர்தல்ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் தேர்தல் நடக்காததற்கு காரணம் அரசியல்வாதிகளே தவிரசமுதாய மக்கள் அல்ல. எந்த இடத்தில் அதிக இனத்தவர் உள்ளார்களோ அதே இனத்தவர்களுக்கு வாய்ப்பு தராமல்இருட்டடிப்பு செய்வது அரசியல்வாதிகள் தான்.

அடுத்த ஆண்டு தேவர் சமாதியில் அனைத்து தரப்பு மக்களும் அமைதியுடன் சென்று வரத் தேவையானநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுப்பையா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+