தமிழகத்தில் விசா இல்லாத பாகிஸ்தானியர்: டி.ஜி.பி. எச்சரிக்கை
சென்னை:
முறையான விசா இல்லாமல் தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று தமிழக டி.ஜி.பி. நெய்வால் கூறியுள்ளார்.
இது குறித்து டி.ஜி.பி. நெய்வால் நேற்று (திங்கள்கிழமை) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
விசா இல்லாமல் பாகிஸ்தானியர்கள் தமிழகத்தில் தங்கியிருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விசா இல்லாமல் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை கண்டுபிடிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்கள் அனைவருக்கும்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் போலீசார் ரகசிய கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.நடமாட்டம் இருப்பதாக தகவல் எதுவும் இல்லை.
திண்டுக்கல் மற்றும் நெல்லை மாவட்டங்களில் 2 பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக சிலர்கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
வீரப்பன் சரண் அடைவதாக எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. வீரப்பனைத் தேடும் பணி தொடர்ந்துநடைபெறுகிறது என்று நெய்வால் கூறினார்.












Click it and Unblock the Notifications