For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 4,000 போதை ஊசிகள் பறிமுதல்: 2 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 4,000 போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றைக் கடத்திவந்த 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை காசிமேடு பகுதியில் போதை ஊசி கடத்தப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) மாலை போதை ஊசிகள் கடத்தி வந்த 2 பேரை காசிமேட்டில் போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

அந்த 2 பேரிடமிருந்தும் சுமார் 4,000 போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை ஒவ்வொன்றும் ரூ.50முதல் ரூ.80 வரை விற்கப்படுவதாகவும் தெரிகிறது.

ஆந்திராவில் உள்ள கடப்பாவிலிருந்து இந்தப் போதை ஊசிகளைக் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டவர்கள்கூறினர்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் தனிப் படை ஒன்று கடப்பா விரைந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X