காணாமல் போன மாஜி எம்.எல்.ஏ.: நீதிமன்றத்தில் ரகசிய விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான எம்.கே. பாலன் காணாமல் போனது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளஅவருடைய மகன் சார்பிலும் போலீசார் சார்பிலும் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் ரகசியவிசாரணை நடைபெற்றது.

கடந்த டிசம்பர் 30ம் தேதி அதிகாலை வாக்கிங் சென்ற பாலன், இதுவரை வீடு திரும்பவேயில்லை.

தற்போது திமுகவில் உள்ள பாலனை அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் தமிழக போலீசார்தான்கடத்தியுள்ளனர் என்று கூறி அவருடைய மகன் மணிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் பாலனைத் தாங்கள் கடத்தவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை எதிர்த்துஅதிமுக சார்பில் அக்கட்சி எம்.பியான திண்டுக்கல் சீனிவாசன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தொடர்பாக ரகசியமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

அதன்படி இரு தரப்பினர் சார்பிலும் நீதிபதி வெங்கடாச்சல மூர்த்தி மற்றும் நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர்முன்னி இன்று ரகசிய விசாரணை நடைபெற்றது.

வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் விசாரணையின்போதுஅனுமதிக்கப்படவில்லை.

பின்னர் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

வெளியே சொல்ல முடியாத சில தகவல்களை நீதிபதிகளிடம் மட்டும் தெரிவிக்க வேண்டிய கட்டாயம்ஏற்பட்டதால்தான் இந்த ரகசிய விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மனுதாரரின் வழக்கறிஞர் பின்னர்தெரிவித்தார்.

தன்னுடைய தந்தையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக ஆளுநர் ராமமோகன் ராவிடமும் மணிமாறன் புகார்மனு ஒன்றைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+