இலங்கை கோவிலுக்கு செல்லும் தமிழக சிற்பங்கள்
அவிநாசி:
இலங்கையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வழிவிடு முருகன் கோவிலுக்காக தமிழகத்தின் கோயம்புத்தூர்மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் 23 சிற்பங்கள் தயாராகி வருகின்றன.
இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக அவிநாசியிலிருந்து சிற்பங்களை வாங்க அக்கோவிலின்கும்பாபிஷேகக் குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி ஜெயரத்தினம் என்பவர் தலைமையில் ஒரு குழு அவிநாசி வந்துள்ளது.
அவிநாசியிலுள்ள லட்சுமி சிற்பக் கலைக்கூடத்தில் செல்வ விநாயகர், பானலிங்கம், சுப்பிரமணியர், பைரவர்,நவக்கிரகங்கள் உள்பட 23 சிற்பங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
இந்த சிற்பங்கள் அனைத்தும் தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கைக்குஅனுப்பப்பட உள்ளன. இதுகுறித்து ஜெயரத்தினம் கூறியதாவது:
அவிநாசியில் வடிக்கப்படும் சிற்பங்கள் அனைத்தும் கலை நுணுக்கத்துடனும் சிறந்த வேலைப்பாடுகளுடனும்இருப்பதால், இங்கே தயாரிக்கப்படும் சிற்பங்களை வாங்க முடிவெடுத்தோம்.
இந்தச் சிற்பங்களில் விசேஷமாக நவக்கிரகங்களின் சிற்பங்கள் தங்கள் தேவியர் மற்றும் வாகனங்களுடன்செதுக்கப்பட்டுள்ளது நன்றாக உள்ளது என்றார் ஜெயரத்தினம்.












Click it and Unblock the Notifications