இந்தியாவில் பேச்சுவார்த்தை: புலிகள் சதி என்கிறார் இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புலிகள்-நார்வே குழு இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையை இந்தியாவில் நடத்த அனுமதிக்கக் கூடாது எனதமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்தப் பேச்சுவார்த்தையை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை கூட ஒரு சாதாரண கொலை என அக் கூட்டத்தில்பேசப்பட்டுள்ளது.
புலிகள் தங்கள் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் மிகப் பெரிய சதித் திட்டம் இருக்கிறது.எனவே, இந்தப் பேச்சுவார்த்தைகளை தமிழகத்திலோ அல்லது இந்தியாவில் எந்த இடத்திலோ நடத்த அனுமதி தரக்கூடாது என்று இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications