ராஜ்யசபா அதிமுக துணைத் தலைவராகிறார் மைத்ரேயன்
சென்னை:
ராஜ்யசபா அதிமுக துணைத் தலைவராக டாக்டர் மைத்ரேயன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
மூப்பனார் மறைவால் காலியான ராஜ்யசபா இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றவர் மைத்ரேயன். பாரதீயஜனதாக் கட்சியிலிருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் அதிமுகவிற்கு வந்தார்.
அவர் மூலம் பாரதீய ஜனதாக் கட்சியுடன் உறவு வைத்துக் கொள்ள ஜெயலலிதா முயலுகிறார் என்ற பேச்சுஅடிபட்டுக் கொண்டிருக்கும்போதுதான் ராஜ்யசபா தேர்தலில் அவருக்கு ஜெயலலிதா டிக்கெட் கொடுத்தார். வெற்றிபெற்றார்.
இந்நிலையில் தற்போது அவரை ராஜ்யசபா அதிமுகவுக்குத் துணைத் தலைவராகவும் ஆக்கியுள்ளார் ஜெயலலிதா.ராஜ்யசபா அதிமுக தலைவராக பி.ஜி. நாராயணன் தொடர்ந்து இருப்பார். பொருளாளராக எஸ்.எஸ். சந்திரனும்,செயலாளராக நிறைகுளத்தானும் இருப்பார்கள்.
பெண் எம்.பியான கோகுல இந்திரா ராஜ்யசபா அதிமுகவின் கொறடாவாக இருப்பார்.
ராஜ்யசபாவில் 7 அதிமுகவினர் எம்.பிக்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.