டெண்டுல்கருக்கு ஆயுதமேந்திய போலீசார் காவல்
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின்டெண்டுல்கர் ஆகியோரை தீவிரவாதிகள் கடத்தப் போவதாக வந்த மிரட்டல்களையடுத்து, 2 பேருக்கும்ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்புக்காகப் போடப்பட்டுள்ளனர்.
பிரதமரின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் அப்துல் கலாமை பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. ஆதரவுதீவிரவாதிகள் கொலை செய்ய முயற்சித்ததாகவும், டெண்டுல்கர் மற்றும் கங்குலியை அவர்கள் கடத்தத்திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய உளவுத் துறைக்குத் தகவல் வந்தது.
இதையடுத் இவர்களுக்குப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள கங்குலியின் வீட்டிலும்மும்பையில் உள்ள டெண்டுல்கரின் வீட்டிலும் ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 6வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டிவரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.3) மும்பையில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் விளையாடவுள்ள டெண்டுல்கருக்கும் கங்குலிக்கும் ஆயுதமேந்திய சிறப்பு போலீசார்பாதுகாப்புக்காகப் போடப்பட்டுள்ளனர்.
மேலும் போட்டி நடைபெறவுள்ள மைதானம் முழுவதையும் மும்பை மாநகரப் போலீசார் தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர்.
இம்மைதானம் முழுவதிலும் இப்போதிலிருந்தே பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மைதானத்தில் ஏராளமானபோலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மும்பை கடத்தல் மன்னனான சோட்டா ஷக்கீல் சினிமா தயாரிப்பாளரான விது வினோத் சோப்ராஎன்பவரிடம் ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து சோப்ரா இதுவரை வாயே திறக்கவில்லை.












Click it and Unblock the Notifications