திருப்பதியில் தெருவில் துப்பினால் இனி அபராதம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி:

திருப்பதியில் சுற்றுச்சூழல் மிக வேகமாக சீர்கெட்டு வருவதையடுத்து அதைத் தடுக்க தீவிர முயற்சிகளில்இறங்கியுள்ளது திருமலை தேவஸ்தானம்.

முதல் கட்டமாக திருப்பதி மலையில் பிளாஸ்டிக் கப்களை பயன்படுத்திவிட்டு எறிபவர்கள், கண்ட இடத்தில் மல,ஜலம் கழிப்பவர்கள், குப்பையை ரோட்டில் போடுபவர்கள் புகை பிடிப்பவர்கள் ஆகியோருக்கு ஆன்-த-ஸ்பாட்அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இன்று முதல் இத் திட்டம் அமலுக்கு வருகிறது.

திருமலையில் உள்ள டீக்கடைகளில் சுகாதாரம் கருதி பிளாஸ்டிக் கப்களில் தான் டீ தரப்படுகிறது. ஆனால், இந்தபிளாஸ்டிக் கப்கள் மண்ணில் கரைவதும் இல்லை. இதனால், திருமலையில் இந்த கப்களால் பெரும் சுற்றுச் சூழல்கேடு ஏற்பட்டுள்ளது. இனி பேப்பர் பிளேட்கள், தெர்மோபிளாஸ்க் கப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்எனவும் தேவஸ்தானம் டீக் கடைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தவிர பான்பராக், வெற்றிலை போன்றவற்றை மென்றுவிட்டுத் துப்புவதால் எத்தனை முறை சுத்தப்படுத்திவெள்ளையடித்தாலும் சாலைகளும் சுவர்களும் அலங்கோலமாகிவிடுகின்றன. இதனால் இந்த அபராதநடவடிக்கையில் தேவஸ்தானம் இறங்கியுள்ளது.

கோவிலையும், அழகிய இந்த மலைப் பகுதியின் சூழலையும் சுத்தமாகப் பராமரிக்க பக்தர்களும் பொது மக்களும்முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் எனவும் தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+