அமெரிக்க அணு உலைகளைத் தகர்க்க அல்-கொய்தா சதி
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள அணு உலைகள் மற்றும் பெரிய அணைக்கட்டுகளைத் தகர்க்க அல்-கொய்தாவினர்திட்டமிட்டுள்ளது தெரிய வந்ததையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பான வீடியோ கேசட்டுகள், வரை படங்கள் மற்றும் ஆவணங்களை அமெரிக்க புலனாய்வுத் துறையினர்அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
விமானங்களைக் கடத்தி மோதியும் வெடிகுண்டுகள் மூலமும் அணு உலைகள் உள்பட 6 முக்கிய இடங்களில்தாக்குதல்களை நடத்த அல்-கொய்தாவினர் திட்டமிட்டுள்ளனர்.
கொலம்பியா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள "கிராண்ட் கவுலீ" அணையைத் தகர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.உலகிலேயே மிகப் பெரிய அணை இதுதான் என்று கூறப்படுகிறது.
மேலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கும் அமெரிக்க மையங்கள் கட்டடங்கள், முகாம்கள் ஆகியவற்றிலும்தாக்குதல் நடத்த அல்-கொய்தாவினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.இதையடுத்து அமெரிக்காவில் பாதுகாப்புஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications