தமிழகத்தில் காமராஜர் ஆட்சிதான் என் லட்சியம்: வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்கூறியுள்ளார்.
கரூரில் நடந்த கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும். அது மட்டும்தான் எனது லட்சியம். இந்தக் கட்சியைநடத்துவதில் இதைத் தவிர வேறு ஒரு காரணம் இல்லை.
கட்சிக்கும், மக்களுக்கும் சேவை செய்வதை தமாகா தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செய்ய வேண்டும். அதைதமது இரு கண்களாக நினைத்துக் கொள்ள வேண்டும்.
எங்கெல்லாம் மக்கள் பிரச்சினையில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தமாகா தொண்டர்கள் சென்றுபிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயல வேண்டும்.
காமராஜர் ஆட்சி என்ற கனவை அடுத்த சட்டசபைத் தேர்தலின்போது நிச்சயம் தமாகா நிறைவேற்றும் என்றுஉறுதியாக நம்புகிறேன் என்றார் வாசன்












Click it and Unblock the Notifications