For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்முவில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மு:

ஜம்முவில் நடந்த வெவ்வேறு வெவ்வேறு சம்பவங்களில் பாதுகாப்புப் படை வீரர்களால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நேற்றிரவு (சனக்கிழமை) ரஜவுரி மாவட்டத்தில் உள்ள சாம் சமத் என்ற கிராமத்தில் போலீஸ் அதிகாரி முகமதுஉசைன் வீட்டுக்கு அடையாளம் தெரியாத தீவிரவாத கும்பல் ஒன்று வீட்டுக் கதவைத் தட்டி அதிகாரியின் தாயிடம்,அந்த அதிகாரி இருக்கும் இடத்தைப் பற்றிக் கேட்டுள்ளனர்.

ஆனால் அவர் சொல்ல மறுக்கவே அவரை வெளியே இழுத்துச் சென்று அவருடைய காதுகளையும், மூக்கையும்அறுத்துள்ளனர் தீவிரவாதிகள்.

இதனால் அந்த தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஜம்முவில் உள்ள ரஜவுரி மாவட்டத்தில் உள்ள கோட்லி காலபன் பகுதியில் 2தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

இவர்களிடமிருந்து 2 ஏகே ரக துப்பாக்கிகளும், வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

உதாம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த ஷகீன்என்ற தீவிரவாதி கொல்லப்பட்டான்.

இதே மாவட்டத்தில் ஷில்தார் என்ற பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையேநடந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். இந்தப் பகுதியில் தாக்குதல் இன்னும் நீடிப்பதாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X