சென்னை ரயிலில் குங்குமப்பூ திருடிய 2 பேர் கைது
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலிலிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூவைத் திருடிய 2போர்ட்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் காசர்கோடு நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். சிங்கப்பூரில் இருந்து குங்குமப்பூ வாங்கி அதைகேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார்.
இதேபோல், மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 21ம் தேதி 50 கிலோ குங்குமப்பூவை ரஹ்மான்அனுப்பியுள்ளார். ஆனால் மும்பைக்குப் போய் சேர்ந்த குங்குமப்பூவின் அளவு 38 கிலோவாக இருந்தது. இதனால்மும்பை நபர் ரஹ்மானுக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் நிலையத்தில் ரஹ்மான் புகார் கொடுத்தார். போலீசார்தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 2 போர்ட்டர்கள், குங்குமப்பூ பொட்டலங்களைத் திருடியதாகதகவல் கிடைத்தது.
இதையடுத்து பன்னீர் மற்றும் ரமேஷ் கண்ணன் ஆகிய 2 போர்ட்டர்களை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் குங்குமப்பூவைத் திருடியதை அவர்கள் ஒத்துக் கொண்டனர்.