தமிழகத்தில் மழை தொடரும்: இதுவரை 9 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
சென்னைக்குத் தென்மேற்கே வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டதையடுத்து கடந்த 3நாட்களாக தமிழகம் முழுவதும் கனத்த மழை பெய்து வருகிறது.
பலத்த மழை காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் ரயில்வே தண்டவாளங்களில் மழை நீர் அரிப்புகாரணமாக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்து.
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால்அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். கடலில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற 20க்கும் மேற்பட்ட மீனவர்களைக் காணவில்லை என்றும் அஞ்சப்படுகிறது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வுநிறுவனம் கூறியுள்ளது.