For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூப்பர் ஸ்டாரின் திடீர் காளி கோவில் விஜயம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் உள்ள காளி கோவிலில் நடிகர் ரஜினி காந்த் திடீரென சனிக்கிழமை வந்து வழிபட்டார்.

சென்னையின் பிசியான இடமான மண்ணடி பகுதியில் உள்ளது அருள்மிகு காளிகாம்பாள் கோவில். இந்தக்கோவில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. 1677ம் ஆண்டு மராட்டியத்தை ஆண்டு வந்த சத்ரபதி சிவாஜி, ஒருபோரைச் சந்தித்தார்.

அந்தப் போருக்கு செல்வதற்கு முன் சென்னை வந்த அவர் இந்த காளிகாம்பாள் கோவிலில் உள்ள அம்மனைதரிசித்து வழிபட்டார். அம்மன் சிலை முன்பு தனது வாளை வைத்து பூஜை செய்தார். அதன் பின் போருக்குச் சென்றஅவர் அந்தப் போரில் மாபெரும் வெற்றியை பெற்றார்.

அத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த காளிகாம்பாள் கோவிலுக்கு நடிகர் ரஜினி காந்த் திடீரெனசனிக்கிழமை வந்தார். அவரை சற்றும் எதிர்பாராத கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெகதீசன் மாலைஅணிவித்து ரஜினியை வரவேற்றார்.

ரஜினி மட்டும் தனியாக கோவிலுக்கு வந்திருந்தார். கோவிலுக்குள் வந்த ரஜினி, அம்மன் சன்னிதானம் முன்புஅமைதியாக அமர்ந்து சுமார் அரை மணி நேரம் தியானித்தார்.

பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்தார். வெளியே வந்த ரஜினியைப் பார்த்ததும் அந்தப் பகுதியில் பெரும்கூட்டம் கூடி விட்டது. இதனால் அவரால் காரினுள் ஏற முடியவில்லை. இதையடுத்து மீண்டும் கோவிலுக்குள்சென்று விட்டார்.

பின்னர் போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே அவர் வெளியே வந்து காரில் ஏறிவீடு திரும்பினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X