ஜெ. வெற்றிக்காக திருவண்ணாமலையில் அதிமுகவினர் கிரிவலம்
திருவண்ணாமலை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிஅதிமுகவினர் கிரிவலம் தொடங்கினர்.
அதிமுக பொதுச்செயலாளரும் ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளருமான ஜெயலலிதா அதிக வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை மாவட்ட அதிமுகமாணவர் அணியினர் 48 நாட்கள் கிரிவலம் செல்வது என்று வேண்டி உள்ளனர்.
இதையொட்டி மாணவர் அணி சார்பில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜையும்,வழிபாடும் நடந்தது.
பின்னர் கோவில் முன்பு இருந்து மாணவர் அணி செயலாளர் ராஜன் தலைமையில் அதிமுகவினர் கிரிவலம்புறப்பட்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் நகர சபை தலைவர் பவன்குமார் கலந்து கொண்டு, கிரிவலத்தைத் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அனந்த கிருஷ்ணன் உட்பட பல அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications