ஆண்டிப்பட்டி: இரவு நேரங்களில் வீடுகளில் அரிசி மூட்டை போடும் அதிமுக
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஆண்டிப்பட்டியில் வீட்டுக்கு ஒரு மூட்டை அரிசி வழங்கி வாக்குகள் பெறும் அரசியல் மோசடியில் அதிமுகஈடுபட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து மதுரையில் இன்று வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டித் தொகுதியில் அதிமுக ஆட்சியின் அதிகார துஷ்பிரயோகம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. இங்குஅறிவிக்கப்படாமலேயே ரூ.12 கோடி செலவில் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதிமுகவினர் ஆண்டிப்பட்டியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மூட்டை அரிசி வழங்க முடிவு செய்துள்ளனர்.இதன்படி இரவு நேரங்களில் வீடு வீடாகச் சென்று அரிசி மூட்டையை விநியோகித்து வருகின்றனர்.
இந்த செயல்கள் பெரிய அரசியல் மோசடி. இதுகுறித்து மத்திய தேர்தல் பார்வையாளர்கள் உரிய நடவடிக்கையைஎடுக்க வேண்டும் என்று வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications