மின்சாரம், டெலிபோன், செல்போன் கட்டணம் செலுத்த தபால் நிலையத்தில் "இ-பில்லிங்" வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மின்சாரம், டெலிபோன் மற்றும் செல்போன் கட்டணங்களை செலுத்த தபால் நிலையங்களில் "இ-பில்லிங்" முறைஅறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக விரைவுத் தபால்துறை பொது மேலாளர் சீனிவாச ராகவன் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் விரைவு பாஸ்போர்ட் மையம் திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை)நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சீனிவாச ராகவன் பேசியதாவது:

சென்னையில் தபால் நிலையங்களில் வரும் மார்ச் மாதத்தில் மின்சாரக்கட்டணம், டெலிபோன் கட்டணம்,செல்போன் கட்டணம் ஆகியவற்றை "இ-பில்லிங்" மூலம் கட்டும் முறையை அறிமுகப்படுத்த உள்ளோம். இதன்மூலம் பொதுமக்கள் மிகுந்த நன்மை அடைவார்கள்.

"இ-பில்லிங்" மூலம் தபால்நிலையத்தில் மின்சாரக் கட்டணத்தை கட்டலாம். மின்சாரக் கட்டணத்துக்கான வரவு ஒருகம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இந்தக் கட்டண வரவிற்கான தகவல்கள் கம்ப்யூட்டர் மூலம் சென்ட்ரல்சர்வருக்கு அனுப்பப்படும்.

மின் வாரியம் இந்த சென்ட்ரல் சர்வர்களிடமிருந்து தேவையான மின் கட்டண விவரங்களைப் பெற்றுக்கொள்வார்கள்.

இதேபோல் டெலிபோன் மற்றும் செல்போன் கட்டணங்களும் இந்த "இ-பில்லிங்" வசதி மூலம் வசூலிக்கப்படும்என்று சீனிவாச ராகவன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+