ஆண்டிப்பட்டி தேர்தல்: திமுக பிரச்சாரத்தால் பன்னீர் வேதனை
சென்னை:
நான் முதல்வராக நீடிக்க வேண்டும் என்றால், ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற கெட்டஎண்ணத்துடன் திமுகவினர் பிரச்சாரம் செய்கின்றனர் என்று வேதனையுடன் கூறினார் தமிழக முதல்வர்பன்னீர்செல்வம்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவை தோற்கடிக்க திமுகவினர் புதிய வகையானபிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சமீபத்தில் தன்னுடைய பிரச்சாரத்தின்போது, சென்னையைச் சேர்ந்த ஜெயலலிதாமுதல்வராக வேண்டுமா? அல்லது உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டுமா?பன்னீர் முதல்வராக நீடிக்க வேண்டுமென்றால் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்காதீர் என்று கூறினார்.
இதுகுறித்து நிருபர்களிடம் பன்னீர் கூறியதாவது:
குறுகிய வட்டத்தில் அரசியல் கண்ணோட்டத்தோடு திமுகவினர் இவ்வாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஜாதிமதத்துக்கு அப்பாற்பட்டு மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார்.
அவரது தலைமையின் கீழ் நான் ஒரு தொண்டனாகவே பணியாற்றுகிறேன். திமுகவினர் தான் கெட்டஎண்ணத்துடன் இது போன்று பிரச்சாரம் செய்கின்றனர். இதை மக்களும் நன்கு அறிவர்.
இந்த தேர்தலில் எதைச் சரியாக செய்ய வேண்டுமென மக்கள் தீர்மானித்து விட்டனர். அதன்படி ஜெயலலிதாவெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்பார்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, யார் முதல்வராக வர வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள்விடுத்தோமோ, அவரே இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஜெயலலிதா முதல்வராக மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் வாக்களிக்கும்படி வலியுறுத்தி பிரச்சாரம்செய்வோம் என்று பன்னீர் கூறினார்.












Click it and Unblock the Notifications