கடத்தல்காரர்களுடன் நிருபர் மனைவி பேச விருப்பம்
கராச்சி:
தன் கணவர் டேனியல் பேர்லைக் கடத்தியவர்களுடன் பேச்சு நடத்த மரியான் பேர்ல் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த 4 நாட்களாக அந்தத் தீவிரவாதிகளிடமிருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. இதையடுத்துடேனியல் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது குறித்து தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு மரியான் பேட்டியளித்தபோது, தன் கணவரைக்கடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளதாக மரியான் கூறினார். யாரோ செய்த கொலைகளுக்கு அப்பாவிகளைப்பழிவாங்குவது தவறு என்று அவர்களிடம் கூறப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
கராச்சியில் இந்தப் பேட்டியை அளித்த 6 மாத கர்ப்பிணியான மரியானும் ஒரு பகுதி நேர பத்திரிக்கை நிருபர்தான்.
அவருடைய கடிதம் பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
பி.பி.சி. தொலைக்காட்சிக்கு மரியான் அளித்த பேட்டியிலும் கடத்தல்காரர்களுடன் தான் பேச விரும்புவதாகத்தெரிவித்தார்.
"என் கணவருக்காக நான் என் உயிரைக் கொடுக்கத் தயாராக உள்ளேன். என் உயிரை எடுத்துக் கொண்டு அவரைவிட்டுவிடுங்கள். அல்லது அவர் அருகிலேயே இருந்து என்னைச் சாகவிடுங்கள்" என்று அப்பேட்டியின்போதுஉருக்கத்துடன் மரியான் கூறினார்.
டேனியல் எங்கே?
இதற்கிடையே டேனியலைத் தேடித் தேடி பாகிஸ்தான் போலீசார் சலிப்படைந்து போயுள்ளதாகத் தெரிகிறது.
இருந்தாலும் அவர்கள் தங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டுள்ளனர். இதையடுத்து டேனியல் எங்குஉள்ளார் என்பது குறித்த மர்மம் நீடித்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சடலம் தன் கணவருடையது அல்ல என்றுமரியான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில் டேனியல் உயிரோடுதான் உள்ளார் என்று இ-மெயில் மூலம் தகவல் அனுப்பிய 16 வயது இளைஞர்ஒருவரைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications