ஆண்டிப்பட்டி: முறைகேடுகளைக் கடந்து திமுக வெற்றி பெறும் - கருணாநிதி
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் அனைத்து முறைகேடுகளையும் கடந்து திமுக அமோகமாக வெற்றி பெறும் என்றுஅக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
சென்னையில் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு போதிய நிவாரணத்தை ஒதுக்கவில்லை.
மேலும், பாதிக்கப்பட்ட நிலங்களையோ விவசாயிகளையோ நேரில் சென்று பார்க்காமல் தமிழக முதல்வரிலிருந்துஅனைத்து அமைச்சர்களும் ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆண்டிப்பட்டியில் தேர்தலைத் தள்ளிவைப்பது எங்கள் நோக்கமல்ல. ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளஅத்தொகுதியின் வாக்காளர் பட்டியலைச் சரிசெய்ய வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.
ஆனாலும் அனைத்துத் தடைகளையும் முறைகேடுகளையும் கடந்து ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர்வைகை சேகர் அமோகமான வெற்றியைப் பெறுவார் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications