தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காத இடங்களில் விரைவில் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத இடங்களில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் கமிஷனர்பி.எஸ். பாண்டியன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள பாண்டியன் வந்திருந்தார். விழாவில் கலந்து கொண்டபின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத இடங்களில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
நாகர்கோவிலில் எந்த வன்முறையும் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது பாராட்டுக்குரியது.
சட்டசபைத் தேர்தல்களுக்கு முன்பாகவே உள்ளாட்சித் தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுபாண்டியன் கூறினார்.












Click it and Unblock the Notifications