சென்னை ரிசர்வ் வங்கியில் தீயணைப்புத் துறை நடத்திய பயிற்சி முகாம்
சென்னை:
தீவிபத்து மற்றும் பூகம்பம் போன்ற சமயங்களில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழகதீயணைப்புத் துறையினர் சென்னையில் செயல்முறை விளக்கம் ஒன்றை நடத்திக் காண்பித்தனர்.
பல மாடிக் கட்டடங்களில் தீவிபத்து ஏற்படும்போது மக்கள் எவ்வாறு செயல்பட்டால் அவர்களைத் தாங்கள்விரைந்து வந்து காப்பாற்ற முடியும் என்பதை தீயணைப்பு வீரர்கள் ராட்சத கிரேன் உள்பட பல நவீனக் கருவிகள்மூலம் செய்து காண்பித்தனர்.
தீவிபத்தோ பூகம்பமோ ஏற்படும்போது, கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்ட மக்கள் எவ்வாறு பொறுமையாகவும்அமைதியாகவும் இருக்க வேண்டும் என்றும் தீயணைப்பு வீரர்கள் விளக்கினர்.
இந்தச் செயல்முறை விளக்க முகாமை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் தீயணைப்புத் துறை வீரர்கள்மக்களுக்குச் செய்து காண்பித்தனர்.
இதையடுத்து தீயணைப்புத் துறை வீரர்களின் இந்தச் செயல்முறை விளக்கத்தை ரிசர்வ் வங்கி ஊழியர்கள் நேரில்வந்து ஆர்வத்துடன் கண்டனர்.












Click it and Unblock the Notifications