ஈவ் டீசிங் .. ஒரே நாளில் 25 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பெண்களைக் கேலி செய்த 25 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அடையாறு பஸ் நிலையம், பெசன்ட் நகர், ராணி மேரி கல்லூரி அருகே ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.அனைவரும் 9வது மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் ரிமாண்டில் வைக்க கோர்ட்உத்தரவிட்டது.
அதே போல அண்ணா சாலை, அயனாவரம் பஸ் நிலையம், ஓட்டேரி, புரசைவாக்கம், எழும்பூர், மாநிலக் கல்லூரி ஆகிய இடங்களுக்குஅருகே ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈவ் டீசிங்கைக் கட்டுப்படுத்த மகளிர் கல்லூரிகள், பஸ் நிலையங்கள், கடற்கரை ஆகிய பகுதிகளில் மாறு வேடங்களில் ஆண், பெண்போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications