மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை வருமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரையில் உயர் நீதிமன்றத்தின் கிளை அமைப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையை அமைப்பதை எதிர்த்து வழக்கறிஞர்கள் குமார், சுரேஷ் குமார் ஆகியோர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
நீதிபதி சதாசிவம் இந்த வழக்கை விசாரித்து வந்தார்.
தற்போது இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பைப் பொறுத்துத் தான் மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை வருமா இல்லையா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications