தேவநேயப் பாவாணர் நூற்றாண்டு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் நூற்றாண்டு தினத்தையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள நூலகங்களில் பாவாணரின்புத்தகங்கள் வைக்கப்படும். இதற்காக ரூ. 20 லட்சம் செலவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பாவாணரின் நூற்றாண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை பேசுகையில்,தமிழகத்தில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் பாவாணரின் புத்தகங்கள் இடம் பெறும்.
இதேபோல, பள்ளி, கல்லூரிகளிலும் பாவாணரின் புத்தகங்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரது நூற்றாண்டு விழாக்களை அனைத்துக் கல்லூரிகளும் கொண்டாட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்அவர்.












Click it and Unblock the Notifications