மசூதிக்குள் மறைந்திருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் மசூதிக்குள் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் குப்வாரா மாவட்டத்தில் துடிகுண்ட் என்ற இடத்தில் எல்லைப்பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த 3 தீவிரவாதிகளைப் பிடிக்கமுயன்றனர்.

ஆனால், அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து படையினரும் சுட்டனர். இதைத் தொடர்ந்து 3தீவிரவாதிகளும் அருகில் உள்ள மசூதியில் புகுந்து கொண்டனர். அதனால் ராணுவப் படைகளும், எல்லைப்பாதுகாப்புப் படைகளும் விரைந்துச் சென்று அந்த மசூதியை சுற்றி வளைத்தனர்.

மசூதிக்குள் மின் சப்ளையையும், குடிநீர் சப்ளையையும் ராணுவத்தினர் துண்டித்து விட்டு ஆயுதங்களைஒப்படைத்துவிட்டு சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட்டவண்ணம் இருந்தனர். இதையடுத்துராணுவத்தினரும் திருப்பிச் சுட்டனர். இதில் ஒரு தீவிரவாதி இறந்தான்.

மற்ற இருவரையும் சரணடைய வைக்க அந்த மசூதியின் இமாம் (தலைவர்) உள்பட 4 பொதுமக்களை ராணுவஅதிகாரிகள் மசூதிக்குள் அனுப்பினர். ஆனால், இந்த இருவரும் தங்களிடம் பேச்சு நடத்த வந்த அந்த 4 பேரையும்பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர்.

எங்களைத் தப்பிக்க அனுமதித்தால் தான் இவர்களை விடுவிப்போம் என்று தீவிரவாதிகள் கூறினர். ஆனால், இதைஏற்க ராணுவம் மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து இமாமையும் 3 பேரையும் தீவிரவாதிகள் விடுவித்தனர்.

ஆனால், சரணடைய மறுத்தனர்.

இந்நிலையில் சரணடைய சொல்லியும் சரணடையாததால் வேறு வழியில்லாமல் இன்று (சனிக்கிழமை) அதிகாலைமசூதிக்குள் இருந்த 2 தீவிரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இவர்கள் 2 பேரும்ஜமாத்-உல்-முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இவர்களின் ஒருவன் பெயர் அபு தன்யால் என்ற அபு ஹம்சா பாபா. இவன் இந்த தீவிரவாத அமைப்பின் ஏரியாகாண்டர். மற்றொருவன் பெயர் ஷபீர் என்ற ரஷீத். இவன் பாகிஸ்தானின் சியால்கோட்டைச் சேர்ந்தவன்.

இந்தத் தாக்குதலின்போது எழுந்த துப்பாக்கிச் சத்தத்தால் பயந்துபோன ஒரு கிராமவாசி மாரடைப்பால் இறந்தார்.மசூதியும் சிறிது சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிரவாதிகள் மீதான இத் தாக்குதலை மேஜர் ஜெனரல் தல்வீர் சிங் முன்னின்று நடத்தினார். மசூதிக்கு எந்தத் தீங்கும்நேர்ந்துவிடக் கூடாது என தனது படைகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+