பாக். தூதரக அதிகாரியை வெளியேற்றிய நேபாளம்
காட்மண்டு:
சார்க் மாநாட்டின் போது இந்திய கள்ள நோட்டுக்கள் வைத்திருப்பதாக பிடிபட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரியைநேபாள அரசு நாட்டைவிட்டு வெளியேற்றியது.
இவரிடமிருந்து 500 ரூபாய் இந்திய கள்ள நோட்டுக்கள் 94ம், 9,200 டாலர் மதிப்புள்ள போலி அமெரிக்கடாலர்களையும் நேபாள போலீசார் பறிமுதல் செய்தனர்.
நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட குழு ஒன்று அவரை விசாரித்தது.
விசாரணையில் அவர் குற்றவாளி என்று தெரிந்ததால் அவரை நேபாள அரசு நாட்டை விட்டு வெளியேற்றஉத்தரவிட்டது. இதையடுத்து அவர் தாய்லாந்து ஏர்வேஸ் விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்று ஒரு பத்திரிக்கை கூறியுள்ளது.
ஆனால் இது குறித்து நேபாள அரசு முறையான அறிக்கையை வெளியிடவில்லை.
இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் பல மில்லியன் அளவுக்கு கள்ள நோட்டுகளை பாகிஸ்தான்அரசு இந்தியாவுக்குள் அனுப்பி வருவதாக பலமுறை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications